ADVERTISEMENT
நாடாளுமன்ற தேர்தலை கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக கூட்டணிக்கான கவுன்டவுன் தொடங்கிவிட்டது. இன்னும் 48 மணி நேரத்தில் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ள நிலையில், பாமகவை அதிமுக கூட்டணியில் சேர்ப்பதற்காக சென்னையில் இன்று காலையில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரும் ராமதாசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அன்புமணி ராமதாசும் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளதாக தகவல்.
ADVERTISEMENT
இதன் பின்னர் ராமதாசும், அன்புமணி ராமதாசும் சென்னை அடையாறில் இபிஎஸ் -ஓபிஎஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.
ADVERTISEMENT
Show comments