ADVERTISEMENT

''மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் பொன்ராஜ்'' - கமல்ஹாசன் அறிவிப்பு

03:00 PM Mar 03, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே அரசியல் கட்சிகள் பிரச்சாரம், கூட்டணி என பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிருந்தன. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 26 அன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல், வாக்கெடுப்பு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடைமுறைகளும் அமலுக்கு வந்தது. தற்போது அரசியல் கட்சிகள் கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.

அதனையடுத்து பிப்ரவரி 27 அன்று மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். அதேபோல் சட்டப்பஞ்சயாத்து இயக்கமும் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்திருந்தது. இந்நிலையில் தற்போது சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், ''முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக டாக்டர் மகேந்திரனை உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அதேபோல் இவரையும் மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். கலாம் என்ற பெயரை திருப்பிப்போட்டால் கிட்டத்தட்ட என் பெயரும் வரும்'' என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT