இந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, ஒன்றியச் செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜன், பிலால் உள்பட கட்சி பொறுப்பாளர்களும் கூட்டணி கட்சியினரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து சீலப்பாடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் ஐ,பெரியசாமி பேசுகையில் “கிராமங்களில் வறுமையை ஒழித்த 100 நாள் வேலை திட்டத்தை மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஒழித்து வருகிறது. இதனால் வடமாநிலங்கள் மட்டுமின்றி தென்மாநிலங்களிலும் பாதிக்கும் நிலைமை உருவாகி உள்ளது.
வங்கிகளில் பணப் பரிமாற்றம் செய்தால் அதற்கு கமிஷன், அன்றாடம் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய உணவு பொருட்களுக்கு கூட அதிக வரி, உள்ளிட்ட பல காரணங்களால் மோடி தலைமையிலான பா.ஜ.க. கட்சியை விரட்ட தயாராகி விட்டார்கள். இங்கு போட்டியிடும் வெற்றி வேட்பாளர் சச்சிதானந்தம் எளிய விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர். எந்த நேரமும் அவரை நீங்கள் சந்திக்கலாம். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து உதவி செய்யக் கூடிய பண்பாளர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சந்தித்து உங்களுக்கு தேவைப்படும் நலத்திட்ட உதவிகளை பெறலாம் என்றதோடு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் 100 நாள் வேலைத்திட்டத்தை காப்பாற்றுவதோடு மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை விரட்டும்” என்று கூறினார்.