Skip to main content

''இதுதான் தமிழக மக்களுக்கான தீபாவளி போனஸ்''- அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி!

Published on 02/11/2021 | Edited on 02/11/2021

 

'' This is the Diwali bonus for the people '' - Interview with Minister I. Periyasamy!

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள கலைஞர் மாளிகையில் பத்திரிக்கையாளர்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது தமிழகத்தில் கரோனா தொற்று அதிகமாக இருந்தது. 24 மணி நேரமும் அனைத்து துறைகளையும் தீவிரமாகச் செயல்பட வைத்து இந்தியாவிலேயே தமிழகத்தில்தான்  கரோனா  கட்டுப்படுத்தப்பட்டது. இதற்குத் தமிழக முதல்வர்தான் காரணம். திமுக ஆட்சிக்கு வந்தபோது தமிழகத்தில் கஜானா காலியாகி 5 லட்சம் கோடிக்கு மேல் கடன் இருந்தது. இதற்கிடையில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார் தமிழக முதல்வர்.

 

கடந்த ஆட்சிக் காலத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் எல்லாம் காற்றில் பறந்துவிட்டன. ஆனால் 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். அதன் ஒரு கட்டமாக தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஏழை எளிய மக்களுக்குத் தீபாவளி போனஸ் ஆகும். இந்த அறிவிப்பு தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது. இதன் மூலம் 16 லட்சம் பேருக்கு 6,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகும். வங்கிகளில் அடமானமாக வைத்துள்ள நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்வது என்பது இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல்முறையாகும். 

 

புது நகைக்கடன் தள்ளுபடி என்பது எந்த மாநிலத்திலும் கிடையாது. சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி மூலம் 15 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியின் போது 21,000 கோடி கடன் சுமையை வைத்துவிட்டுச் சென்றனர். கூட்டுறவுத்துறை அமைச்சராகப் பதவியேற்ற போது கூட்டுறவுத்துறையில் உள்ள கடனை நினைத்து எனது மனம் மிகவும் பாடுபட்டது. எப்படித் தீர்வுகாண முடியுமா எனக் குழம்பிப் போயிருந்த நேரத்தில் பலமுறை என்னை நேரில் அழைத்து இதுகுறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி, உதவிக்கரம் நீட்டினார் தமிழக முதல்வர். கூட்டுறவுத்துறையில் ஆராய்ச்சி செய்யக்கூடிய வகையில் புதிய கல்லூரியைக் கொடைக்கானலில் அமைக்க உள்ளோம். கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி என்பது நேர்மையாக நடைபெறும். எந்த புகாருக்கும் இடமளிக்காமல் உரிய முறையில் வீடு தேடிச் சென்று தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகைக்கான நகையைத் திருப்பி வழங்கப்படும். 

 

கூட்டுறவுச் சங்கம் மற்றும் கூட்டுறவு வங்கியில் உள்ள நிர்வாகஸ்தர்கள், அலுவலர்கள் பணியாளர்களுக்கு  நகைக்கடன் தள்ளுபடி கிடையாது. கடந்த ஆட்சியின் போது கூட்டுறவுச் சங்க தேர்தலை நடத்தாமல் அவர்களே தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமனம் செய்துகொண்டனர். இதுபோல் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. ஆகவே இதற்கு நிச்சயம் முடிவு வரவேண்டுமெனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆகவே கூட்டுறவுச் சங்க தேர்தல் நடத்துவது குறித்து முதல்வர் விரைவில் முடிவு எடுப்பார். முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேக்கி வைப்பதில் திமுக அரசு எப்பொழுதும் உறுதியாக இருக்கும். 152 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேக்கி வைப்பதற்குத் தமிழக முதல்வர் முயற்சி செய்து வருகிறார். இதில் திமுக அரசு எப்பொழுதும் விட்டுக் கொடுக்காது. 

 

விவசாய பயிர்க் கடனுக்கான கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் வாங்கி சென்று கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கத்தில் கடன் கேட்டால் வட்டி இல்லா கடன் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடன் கேட்டு வரக்கூடிய விவசாயிகளுக்கு உடனடியாக அதிகாரிகள் கடன் வழங்க வேண்டும் இல்லை என்றால் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் நடைபெறும்'' என்று கூறினார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.