நேற்று திருப்பரங்குன்றத்திற்குட்பட்ட ஆலங்குளம், தனக்கன்குளம் ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து துணைமுதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ADVERTISEMENT
அப்போது அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே மக்கள் கலைந்துசென்றனர். அதைப்பார்த்த அவர், அம்மா, தங்கச்சி எவ்வளவு கஷ்டப்பட்டு பேசிகிட்டு இருக்கேன். பாருங்க, என்னைய பார்த்த உங்களுக்கு பாவமா தெரியலையா, பாருங்கம்மா என கெஞ்சினார். இது அந்த பகுதியில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அவரையே இப்படி கெஞ்ச விட்டீர்களே எனவும் நகைத்துகொண்டனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments