ADVERTISEMENT

தமிழகம் மீட்போம்! மு.க.ஸ்டாலின் இரண்டாம் கட்ட சிறப்பு பொதுக்கூட்டம்!

04:34 PM Nov 10, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

'தமிழகம் மீட்போம்' எனும் தலைப்பில் சட்டமன்றத் தேர்தலுக்கான சிறப்புப் பொதுக்கூட்டங்களை காணொலி காட்சி மூலம் ஒவ்வொரு மாவட்டமாக நடத்தி வருகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். முதல் கட்டமாக ஈரோடு, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, வேலூர், நீலகிரி, மதுரை, விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் இக்கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 6 மாவட்டங்களில் சிறப்புப் பொதுக்கூட்டங்களை நடத்த முடிவு செய்திருக்கிறார் ஸ்டாலின். அதன்படி, வருகிற 18-ஆம் தேதி தர்மபுரி, 21-ஆம் தேதி சேலம், 25-ஆம் தேதி நெல்லை மற்றும் தென்காசி, 29-ஆம் தேதி திருப்பூர், டிசம்பர் 2-ஆம் தேதி கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சிறப்புப் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அரசு குறித்து, சிறப்புப் பொதுக் கூட்டங்களில் ஸ்டாலின் முன் வைக்கும் விமர்சனங்கள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக திமுகவினரிடம் உற்சாகம் கொப்பளிக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT