ADVERTISEMENT

வாக்கு எண்ணும் மையத்தில் சமூக இடைவெளி மிஸ்சிங்... 

08:44 AM May 02, 2021 | rajavel

சென்னை விருகம்பாக்கம், மைலாப்பூர் தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. தபால் வாக்குகள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சுற்றிலும் 500 வாக்குகள் மட்டுமே எண்ணப்படுகின்றன. அதற்கேற்ப வாக்குசீட்டுகள் கட்டுகளாக கட்டப்பட்டன. வாக்குச் சீட்டில் வாக்களித்தவர் கையொப்பம்மிட்டுள்ளாரா என்பதை சரிபார்த்தவாறே எண்ணப்படுகிறது.

ADVERTISEMENT

அண்ணாபல்கலைக்கழகத்தில் எண்ணப்படும் தொகுதிகளின் தபால் வாக்குகளில் திமுக கூட்டணி முன்னிலையில் இருக்கிறது. வாக்குகள் எண்ணப்படுவது மிக ஸ்லோவாக இருக்கிறது. மையத்தில் இருப்பவர்கள் முக கவசம் அணிந்திருந்தாலும் சமூக இடைவெளி என்பது மிஸ்சிங். லயோலா கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் கோவிட் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படவில்லை என புகார். 14 மேஜைகள் அருகருகே இருப்பதால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியவில்லை என புகார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT