ADVERTISEMENT

ஒடிசாவில் துப்பாக்கியால் சுடப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் உயிரிழப்பு

08:11 PM Jan 29, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்த சுகாதாரத்துறை அமைச்சர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

ஒடிசாவின் பிரஜ்ராஜ் நகர் என்ற பகுதிக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்றுகொண்டிருந்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸை உதவி சார்பு ஆய்வாளர் கோபால் தாஸ் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மருத்துவத்துறை அமைச்சர் நபா தாஸின் நெஞ்சு பகுதியில் தோட்டாக்கள் பாய்ந்தது.

இதில் படுகாயமடைந்த அமைச்சர் நபா தாஸ் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் காவலர் கோபால் தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கவலைக்கிடமாக இருந்த அமைச்சர் நபா தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT