ADVERTISEMENT

கமல், ரஜினி இருவருக்குள்ளும் சிண்டு முடியும் பகல் கனவு பலிக்காது: நமது அம்மா நாளிதழுக்கு பொன்னுசாமி கண்டனம்

12:13 PM Nov 21, 2019 | rajavel

ADVERTISEMENT

கமல், ரஜினி இருவருக்குள்ளும் சிண்டு முடியும் நமது அம்மா நாளிதழின் பகல் கனவு பலிக்காது என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியுள்ளார்.

ADVERTISEMENT


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"மக்கள் நீதி மய்யம்" தலைவர் கமல்ஹாசன் குறித்து ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், உதயகுமார், கடம்பூர் ராஜூ என அமைச்சர் பெருமக்கள் ஒவ்வொருவரும் நித்தமும் ஒரு விமர்சனத்தை முன் வைத்து தங்களின் அரசியல் எதிர்காலம் குறித்த அச்ச உணர்வை ஊடகங்கள் முன் தொடர்ந்து பகிர்ந்து வரும் வேளையில் "தமிழகத்தின் நலனிற்காக கரம் கோர்க்க தயார்" என்று பரஸ்பரம் அறிவித்துள்ள கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் குறித்து "பதினாறு வயதும், பதராகும் பொழுதும்" என்கிற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு "ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டணியின் ஒட்டுமொத்த பயத்தை நமது அம்மா நாளிதழ் வெளிக் காட்டியுள்ளது."


மேலும் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை வாய் மூடி அடிமை சாமரம் வீசிக் கொண்டிருந்த அமைச்சர்கள் அனைவரும் அண்மையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் "மக்கள் நீதி மய்யம் கட்சி" பெற்ற கணிசமான வாக்குகளால் பித்துப்பிடித்துப் போய் "எதைத் தின்றால் பித்தம் தெளியும்...?" என தலைமுடியை பிய்த்துக் கொண்டு திரியும் வேளையில் "தமிழகத்தின் நலனிற்காக கரம் கோர்க்க தயார்" என்று பரஸ்பரம் அறிவித்துள்ளபடி கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் வரும் தேர்தல்களில் ஊழல் சக்திகளை களைந்து, அவைகளை அடியோடு வேரறுக்க ஒன்று சேர்ந்து விட்டால் எங்கே தங்களின் அரசியல் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடுமோ..? தங்களின் வருமானத்திற்கு தடங்கல் வந்து விடுமோ...? தமிழகத்தை பங்கு போடும் கனவு பொய்த்துப் போய் விடுமோ...? என்கிற அச்சத்தில், கலக்கத்தில் ஆளுங்கட்சியினர் இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அந்த அச்ச உணர்வே அமைச்சர் பெருமக்கள் போன்று அதிமுகவின் அதிகாரபூர்வ ஏடான "நமது அம்மா" நாளிதளையும் உளறிக் கொட்ட வைத்துள்ளது.


அதுமட்டுமின்றி "ரஜினியோடு போட்டி போட்டு தோற்று விட்ட கமல், அவரை அரசியலில் தன்னோடு இணைத்து ரஜினியின் தனிச்செல்வாக்கை மறைத்து விட நரிக்கணக்கு போடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதோடு, கமலோடு கரம் கோர்ப்பது, எலியும் பூனையும் இணைந்து குடித்தனம் நடத்தப் போகிறேன் என்பதற்குச் சமம், இதற்கு ரஜினியும் வலியச் சென்று பலிகடா ஆவேன் என்பது பரிதாபம் என தமிழக நலனிற்காக ஒன்று சேர தயார் என பரஸ்பரம் அறிவித்துள்ள அவர்கள் இருவருக்குள்ளும் சிண்டு முடிந்து விடும் பணியை, தனது குள்ளநரித்தனத்தை "நமது அம்மா நாளிதழ்" அந்த கட்டுரை வாயிலாக கனக்கச்சிதமாக செய்திருக்கிறது. சிண்டு முடிந்து அதன் மூலம் பலனை அனுபவிக்க துடிக்கும் அதிமுகவின் அதிகாரபூர்வ ஏடான அந்நாளிதழின் பகல் கனவும், சகுனி வேலையும் கண்டிப்பாக பலிக்கப்போவதில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT