ADVERTISEMENT

'துரோகி வெளியே போ...'-ஓபிஎஸ்ஸுக்கு எதிராக முழக்கம்!

10:46 AM Jun 23, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் இன்று சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற இருக்கின்ற நிலையில் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் வானகரம் புறப்பட்ட நிலையில் ஓபிஎஸ் முன்னதாக வந்து சேர்ந்தார். அப்பொழுது மண்டபத்தின் உள்ளே இருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என ஓபிஎஸ் வெளியேற வேண்டும் என முழக்கமிட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம் மேடை ஏறினார். துரோகி வெளியே போ என முழக்கம் எழுந்ததால் வைத்தியலிங்கம் உடனடியாக மேடையை விட்டு இறங்கினார்.

அப்பொழுது மேடையிலிருந்த முன்னாள் அமைச்சர் வளர்மதி தொண்டர்கள் அனைவரும் அமைதிகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததோடு, 'ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை' என இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பேசினார் வளர்மதி.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT