ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றுள்ளார். எடப்பாடி பழனிசாமி 1,60,730 வாக்குகளும், திமுகவின் சம்பத் குமார் 87,874 வாக்குகளும் பெற்ற நிலையில் திமுக வேட்பாளர் சம்பத் குமாரை விட 72,856 வாக்குகள் பெற்று எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றுள்ளார்.
Show comments