ADVERTISEMENT

‘எங்களுக்கு எல்லாம் ஓகே தான்’ - மத்திய அரசுக்கு பதில் கடிதம் போட்ட இபிஎஸ்

11:51 AM Jan 14, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. இது தொடர்பான ஆய்வினை நடத்தவும் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக அதிமுகவின் கருத்துகளைக் கேட்கும் வகையில் சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது. அக்கடிதத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமியின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தொடர்பான கருத்துகளை ஜன.30 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என சட்ட அமைச்சகம் கூறியிருந்தது.

இந்நிலையில் தற்போது அக்கடிதத்திற்குப் பதில் அளித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் அதிமுக சார்பில் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்னும் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT