ADVERTISEMENT
கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தல் காரணமாக தேர்தல் அறிக்கையை திருத்தி வெளியிட்டுள்ளது திமுக.
ADVERTISEMENT
2019 பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் தமிழகத்தில் சூடு பிடித்துள்ளது. நேற்று திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில், சிறு மற்றும் குறு விவசாயிகளின் அனைத்து வகைப் பயிர் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திமுக தனது தேர்தல் அறிக்கையில் வெளியான பயிர் கடன் பற்றிய வாக்குறுதியை திருத்தி வெளியிட்டுள்ளது. அதில், ''விவசாயிகளின் கோரிக்கை மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் விருப்பத்தை ஏற்று, அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்படுகிறது'' என கூறப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
Show comments