அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு , அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி துறை வைகோவுக்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டி பேசினர். அப்போது அமைச்சர்கள் பேசியதாவது:- முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சிலிண்டர் விலையை ரூ.500 ஆக குறைப்போம் என்றும் பெட்ரோல் 75 ரூபாயும், டீசல் விலையை 65 ரூபாயும் குறைக்கப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளார். எனவே, பொதுமக்கள் சிந்தித்து வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் தீப்பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றனர்.
பிரசாரத்தின்போது திருச்சி மேயர் மு.அன்பழகன், திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் மல்லிகா, மாவட்ட குழு உறுப்பினர் கணேசன், பேரூராட்சி கவுன்சிலர் நித்தியா, ஒன்றிய குழு உறுப்பினர் ரவிக்குமார், சிறுபான்மை நலக்குழு மாவட்ட செயலாளர் அலெக்ஸ், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார், மாநில தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி உள்ளிட்ட மறுமலர்ச்சி திமுக நிர்வாகிகளும், இந்தியா கூட்டணியின் தோழமை இயக்க நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.
தொடர்ந்து கூத்தைப்பார் தேவராயனேரி, திருச்சி மலைக்கோட்டை பகுதி என்.எஸ்.பி.ரோடு தெப்பக்குளம், ஜீவா நகர், நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதிகளில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரச்சாரம் செய்தார். சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.