ADVERTISEMENT
இதனையடுத்து, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று (03.02.2024) பேச்சுவார்த்தை நடத்தியது. திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர். பாலு தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 4 விருப்பத் தொகுதியில் இருந்து 2 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடங்களையும் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
ADVERTISEMENT
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு, மதிமுகவிற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், நாளை (04-02-24) காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
Show comments