ADVERTISEMENT

ராஜ்யசபா வேட்பாளர் யார் என்று அறிவித்த திமுக! குழப்பத்தில் அதிமுக!

12:29 PM Jul 01, 2019 | Anonymous (not verified)

மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிக்கிப்பட்ட நிலையில், திமுக சார்பில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதுகுறித்த அறிவிப்பை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தின்படி ஒரு இடம் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அதிமுக சார்பில் யாருக்கு கொடுக்கப்படும் என்று பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ADVERTISEMENT


ADVERTISEMENT


அதிமுக கூட்டணியில் பாமாகவிற்கு ஒரு இடம் கொடுக்கப்படும் என்று நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே கூறியுள்ளதால் அவர்களுக்கு தரப்படலாம் என்று கூறப்படுகிறது. மற்ற இரு இடங்களுக்கு அதிமுகவில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த இரண்டு இடங்களுக்கும் கட்சி சீனியர்களான மைத்ரேயன், முன்னாள் எம்.பி. தம்பிதுரை மற்றும் கே.பி,முனுசாமி ஆகிய மூவரும் கேட்டு வருவதால் கட்சியில் யாருக்கு கொடுக்கலாம் என்று குழப்பம் ஏற்பட்ட்டு வருகிறது. இதில் ஓபிஎஸ் சார்பாக கே.பி.முனுசாமிக்கும், எடப்பாடி சார்பாக தம்பிதுரைக்கும் ஆதரவு இருக்கும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT