ADVERTISEMENT

பங்கு கேட்டு யாரும் வந்து விடாதீங்க... ஐயா குடும்பத்துக்கு மட்டும் தான்... அன்புமணிக்கு திமுக எம்.பி பதிலடி!

03:39 PM Mar 10, 2020 | Anonymous (not verified)

சமீபத்தில் மேட்டூர் அடுத்த மேச்சேரியில் பாமகவின் முப்படை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புணி, பாமக தொடங்கி 30 ஆண்டுகள் ஆவதாக கூறினார். பின்தங்கியுள்ள மக்களின் உண்மை நிலையை அறிய மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். மேலும் திமுக, அதி.மு.க.,காங்கிரஸ் போன்ற கட்சிகள், ஆட்சி செய்வதற்காக பாமக தொடங்கவில்லை என்றும், பாமக ஆட்சியமைக்கவே கட்சி தொடங்கியதாக அன்புமணி பேசினார். அன்புமணியின் இந்த பேச்சால் அதிமுக தலைமை சற்று அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இந்த நிலையில் பாமகவின் ராஜ்யசபா எம்.பி அன்புமணியின் இந்த பேச்சுக்கு தருமபுரி திமுக எம்.பி டாக்டர்.செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பாமக தோழர்களே @draramadoss உங்க வியர்வை/ உழைப்பை வைத்து அடுத்த வியாபாரம் பேச தயார் ஆகிவிட்டார். கதைகள் உடன் புது டிசைன் ரெடி பண்ணிட்டு வருவார். எல்லாம் ரெடி ஆ இருங்க. ஆனா ஒன்னு மட்டும் சொல்லிடேன், பங்கு கேட்டு யாரும் வந்து விடாதீங்க. அது நம்ம ஐயா குடும்பத்துக்கு மட்டும் தான் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT