ADVERTISEMENT

ரயில் மறியல் போராட்டம்; 500க்கும் மேற்பட்ட காங்கிரசார் கைது

05:18 PM Apr 15, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 15ல் (இன்று) ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார்.

இதன் ஒரு பகுதியாக திருச்சியில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்திற்கு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மேலும் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT