ADVERTISEMENT

"காஃபி டே சித்தார்த்தா" தற்கொலையை வைத்து காங்கிரசுக்கு செக் வைக்கும் பாஜக!

03:57 PM Aug 19, 2019 | Anonymous (not verified)

காஃபி டே உரிமையாளர் சித்தார்த் தற்கொலை செய்துக்கிட்ட பிறகும், அவர் நிறுவனம் தொடர் தலைவலியை சந்திச்சிக்கிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. கர்நாடகாவை சேர்ந்த காஃபி டே உரிமையாளர் சித்தார்த், தற்கொலை செய்துகொள்வதற்கு முன், வருமான வரித்துறையின் கெடுபிடியால் தான் இந்த விபரீத முடிவை எடுப்பதாகக் கடிதம் எழுதி வச்சிருந்தார். உண்மையில், அவருடைய தொழிலை வச்சி எந்தக் கெடுபிடியையும் வருமான வரித்துறை காட்டலை. அதேசமயம், கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் உட்பட வெளிமாநில அரசியல்வாதிகள் பலரும், தங்கள் கறுப்புப் பணத்தை சித்தார்த்திடம் கொடுத்து வைக்க, அதை எல்லாம் சித்தார்த் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தாராம்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இதை மோப்பம் பிடித்த வருமான வரித்துறையினர், யார் யாரின் பணம் உங்களிடம் இருக்குதுன்னு கேட்டு நெருக்கடி கொடுத்திருக்காங்க.'' இதனையடுத்து யாரையும் காட்டிக்கொடுக்க முடியாத நிலையில்தான் சித்தார்த் இப்படியொரு மோசமான முடிவைத் தேடிக்கிட்டாருன்னு சொல்றாங்க. இப்போது காஃபி டே மீண்டும் இயங்கத் தொடங்கினாலும், சித்தார்த்திடம் பணம் கொடுத்த அரசியல் புள்ளிகள் ஒருபுறமும், வருமான வரித்துறையினர் இன்னொரு புறமும் நெருக்கடி தருகிறார்களாம். மேலும் ரெய்டு அபாயத்திலும் சிக்கிக் கொண்டிருக்கிறதாம் காஃபி டே. சித்தார்த் தற்கொலையை வச்சு காங்கிரசுக்கு குறி வைக்கும் வேலையையும் பா.ஜ.க. அரசு கச்சிதமா காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT