அதில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கொடிக்கம்பத்தில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றி பறக்க விட்டனர். இதனைக் கண்ட அதிமுக இபிஎஸ் தரப்பினர் ஆத்திரமடைந்து வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக வெடித்தது. மேலும் இதில் அதிமுக இபிஎஸ் அணியின கிழக்கு மாவட்டச் செயலாளர் முருக்கோடை ராமர் மற்றும் தேனி நகர செயலாளர், ஒன்றிய செயலாளர், மற்றும் முன்னாள் தேனி பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் ஓ.பி.எஸ். தயார் செய்து நிறுவப்பட்ட கொடி கம்பத்தை கொடியை அவிழ்த்து விட்டனர். அதன் பின்பு கொடிக்கம்பத்தை பிடித்து ஆட்டி சேதப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டனர்.