ADVERTISEMENT
ADVERTISEMENT
சென்னை கிண்டியில் அமைந்துள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.
வரும் 18ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர் பொன்முடி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் இந்த சந்திப்பில் உடனிருந்தனர். கரோனா தடுப்பு நடவடிக்கை, நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Show comments