ADVERTISEMENT

 பாலிதீன், பிளாஸ்டிக் பைகளுக்கு விதித்த தடையை நீக்கக் கோரி வழக்கு

12:22 AM Apr 08, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டத்தில், பாலிதீன், பிளாஸ்டிக் பைகளுக்கு விதித்த தடையை நீக்கக் கோரி, அந்த மாவட்ட வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவை பரிசீலிக்கும்படி, மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் பாலிதீன், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை நீக்க கோரி அளித்த மனுவை பரிசீலிக்க ஆட்சியருக்கு உத்தரவிடக் கோரி நீலகிரி மாவட்ட அண்ணா வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி சுப்பையா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, பாலிதீனுக்கு மாற்றாக எந்த பையை பயன்படுத்துவது என கண்டறியும் வரை, பாலதீன் பைக்கு பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, வியாபாரிகள் சங்கத்தின் மனுவை பரிசீலிக்கும்படி, மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT