ADVERTISEMENT

மோடி, ராஜ்நாத் சிங்கை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

03:29 PM Oct 23, 2018 | elaiyaselvan



மத்திய அரசின் அழைப்பின் பேரில் டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இரண்டு நாள் பயணமாக செல்லும் அவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்திக்கிறார்.

ADVERTISEMENT

தமிழக அரசியல் மற்றும் தமிழக அரசு நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்படுகின்றன.

மேலும், இந்த சந்திப்பின்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT