ADVERTISEMENT

“அண்ணாவின் கொள்கைகளை மாற்றிவிட முடியாது...” ராமதாஸ் கடும் கண்டனம் 

01:05 PM Jul 30, 2020 | rajavel

ADVERTISEMENT

அண்ணா சிலைக்கு காவிக்கொடி கட்டப்பட்டிருந்த நிகழ்வுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ''கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில், அறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டப்பட்டிருக்கிறது, இத்தகைய வெறுப்பரசியல் கண்டிக்கத்தக்கது. இது தலைவர்களை இழிவுபடுத்தும் செயலாகும். இந்த இழிசெயலை செய்தவர்களுக்கு இதனால் என்ன பயன் கிடைக்க போகிறது?'' என கண்டனம் தெரிவித்துள்ள அவர்,

''கொள்கைகளை, கொள்கைகளால் எதிர்கொள்ள வேண்டும். மாற்று நிற கொடிகளை போர்த்துவதன் மூலம் அண்ணாவின் கொள்கைகளை மாற்றிவிட முடியாது. இத்தகைய இழிசெயலை செய்தவர்கள், அதற்கு தூண்டுதலாக இருந்தவர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்!'' என கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT