Skip to main content

முன்பே சொன்ன நக்கீரன்! - கோவில்பட்டியில் களமிறங்கிய டிடிவி.தினகரன்!

Published on 11/03/2021 | Edited on 11/03/2021

 

AMMK PARTY CANDIDATES LIST TN ASSEMBLY ELECTION

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (12/03/2021) தொடங்க உள்ள நிலையில், தங்களது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன. 

 

அதன் தொடர்ச்சியாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை டிடிவி.தினகரன் நேற்று (10/03/2021) வெளியிட்டிருந்த நிலையில், தற்போது 50 பேர் கொண்ட இரண்டாம் கட்டப் பட்டியல் வெளியாகியுள்ளது. 

 

AMMK PARTY CANDIDATES LIST TN ASSEMBLY ELECTION

அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள 50 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், கோவில்பட்டி- டிடிவி.தினகரன், சாத்தூர்- ராஜவர்மன், எடப்பாடி- பூக்கடை என்.சேகர், குடியாத்தம் (தனி)- ஜெயந்தி பத்மநாபன், ராமநாதபுரம்- முனியசாமி, திருநெல்வேலி- பாலகிருஷ்ணன், திருப்போரூர்- கோதண்டபாணி, திருப்பரங்குன்றம்- டேவிட் அண்ணாதுரை, மானாமதுரை (தனி)- மாரியப்பன் கென்னடி, தாம்பரம்- கரிகாலன், திருவையாறு- வேலு கார்த்திகேயன், தியாகராய நகர்- பரணீஸ்வரன், திருப்பூர் (தெற்கு)- விசாலாட்சி, விழுப்புரம்- பாலசுந்தரம், பென்னேரி (தனி)- பொன்ராஜா, பூந்தமல்லி (தனி)- ஏழுமலை, அம்பத்தூர்- வேதாச்சலம், சேலம் (தெற்கு)- வெங்கடாஜலம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

 

அதேபோல், கிணத்துக்கடவு- ரோகினி கிருஷ்ணகுமார், மண்ணச்சநல்லூர்- ராஜசேகர், முதுகுளத்தூர்- முருகன், மதுரவாயல்- லக்கி முருகன், மாதவரம்- தட்க்ஷிணாமூர்த்தி, பெரம்பூர்- லட்சுமி நாராயணன், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி- ராஜேந்திரன், அணைக்கட்டு- சத்யா, திருப்பத்தூர்- ஞானசேகர், பர்கூர்- கணேஷ்குமார், ஓசூர்- மாரே கவுடு, செய்யாறு- வரதராஜன், செஞ்சி- கௌதம் சாகர். ஓமலூர்- மாதேஸ்வரன், பரமத்திவேலூர்- சாமிநாதன், திருச்செங்கோடு- ஹேமலதா, அந்தியூர்- செல்வம், குன்னூர்- கலைச்செல்வன், பல்லடம்- ஜோதிமணி, கோவை (வடக்கு)- அப்பாதுரை, திண்டுக்கல்- ராமுத்தேவர், மன்னார்குடி- காமராஜ், ஒரத்தநாடு- சேகர், காரைக்குடி- பாண்டி, ஆண்டிப்பட்டி- ஜெயக்குமார், போடிநாயக்கனூர்- முத்துச்சாமி, ஸ்ரீ வில்லிப்புத்தூர் (தனி)- சங்கீதப்ரியா சந்தோஷ் குமார், சிவகாசி- சாமிக்காளை, திருவாடானை- ஆனந்த், விளாத்திகுளம்- சீனிச் செல்வி, கன்னியாகுமரி- செந்தில் முருகன், நாகர்கோவில் - ரோஸ்லின் அமுதராணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

 

AMMK PARTY CANDIDATES LIST TN ASSEMBLY ELECTION

 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிட உள்ள நிலையில், அவரை எதிர்த்து அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் போட்டியிடுகிறார். 

 

AMMK PARTY CANDIDATES LIST TN ASSEMBLY ELECTION

 

வருகிற சட்டமன்றத் தேர்தலில், கோவில்பட்டி தொகுதியில் டிடிவி.தினகரன் போட்டியிடுவார் எனக் கடந்த டிசம்பர் மாதம், 28- ஆம் தேதி, நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு” - டிடிவி தினகரன் மனைவி கலகல பேச்சு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வலம் வருகிறார்கள். அதே சமயம் பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சாரம் செய்யப்போவதாகவும்,  எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் சொல்லி இருந்தார். 

His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

அதன் அடிப்படையில் தான் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தனது கணவருக்காக தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, “குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள். சின்னத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவருக்கும் சின்னத்தை எடுத்து சொல்லுங்கள். ஏனென்றால் இதற்கு முன் போட்டியிட்டபோது வேறொரு சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டதால் இதை சொல்கிறேன். குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு”என கலகலப்பாக பேசி வாக்கு சேகரித்தார்.

Next Story

“இந்த ஜென்மத்தில் நான் கொடுத்து வச்ச பாக்கியம் இது” - டி.டி.வி தினகரனின் மனைவி!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
TTV Dhinakaran's wife Anuradha is campaigning in Theni constituency

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க.வில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில்  நாராயணசாமி, பிஜேபி கூட்டணி சார்பில் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உள்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வளம் வருகிறார்கள். இருந்தாலும் திமுக, அதிமுக, டிடிவிக்கு இடையே தான் கடும் போட்டியும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தான் பிஜேபி கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தொகுதியில் பல ஊர்களில் தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து மேலும் தேர்தல் பிரச்சாரம் செய்யவும் இருக்கிறார். இந்த நிலையில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சார செய்யப்போவதாகவும்,  எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று சொல்லி இருக்கிறார். அதன் அடிப்படையில் தான் டிடிவி மனைவியான அனுராதா தனது கணவருக்காக தேனி  பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில்  வாக்காளர் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

TTV Dhinakaran's wife Anuradha is campaigning in Theni constituency

அந்த வகையில்,  முதன் முதலில் போடி தொகுதியில் உள்ள முத்தையன் செட்டிபட்டி கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனது பிரச்சாரத்தை அனுராதா தொடங்கினார். அப்போது அங்கு குடியிருந்த பெண்கள் மாலை சால்வை அணிவித்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து அனுராதா பேசும் போது, உங்கள் வீட்டுப் பிள்ளை செல்வன் டிடிவி மனைவியாக உங்களிடம் நான் வந்திருக்கிறேன். அவர் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய சென்று விட்டதால் ஒரு வாரம் பிரச்சாரத்திற்கு வரமாட்டார். அதனால் நான் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். இந்த ஜென்மத்தில் நான் கொடுத்து வச்ச பாக்கியம் இது. 16 வருடத்திற்கு பிறகு இங்கு வந்திருக்கிறார். அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றுதான் எனது தாழ்மையான வேண்டுகோளை உங்களிடம் வைக்கிறேன்” என்று வாக்காளர் மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.

அதோடு ஜாதி ரீதியாகவும் தலைவர்களை சந்தித்தும் வீடுகளுக்குள் சென்று வாக்காளர்களிடமும், பெண்களிடமும் ஆதரவு திரட்டி வருகிறார் அது போல் பிரச்சார வேனில் ஒவ்வொரு பகுதியாக சென்று குக்கர் சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்காள மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.