விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏவாகவும், அக்கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர் குமரகுரு. இவருக்கு இன்று அதிகாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குமரகுருவை சிகிச்சைக்காக அவசரமாக அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்துள்ளனர்.
ADVERTISEMENT
இதையடுத்து குமருகுரு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments