ADVERTISEMENT
முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்துவருகிறார்கள். அதன்படி சென்னையில் உள்ள அவரது வீட்டிலும், கரூரில் 20 இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது.
ADVERTISEMENT
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இல்லத்தில் சோதனை நடைபெற்றுவருவதால் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன் ஆகியோர் அவரை காண அவர் இல்லத்திற்கு வந்தனர்.
Show comments