விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் திமுக - அதிமுக நேரடியாக மோதுகிறது. திமுக வேட்பாளராக நா.புகழேந்தி போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார் முத்தமிழ்ச்செல்வன்.
TAG1 --------------------------------------------------
அதனைத் தொடர்ந்து தொகுதியில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுடன் வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விக்கிரவாண்டி பேரூராட்சியில் அதிமுகவினருடன் சென்று வாக்கு சேகரித்தார். அங்கு வணிகர்களிடம் தனக்கு ஆதரவு கோரி வாக்கு சேகரித்தார்.
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT