ADVERTISEMENT

அதிமுக அலுவலகத்தில் பொன்னையன் உட்பட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை! (படங்கள்) 

03:16 PM Jun 17, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என அக்கட்சியினர் உட்பட சில நிர்வாகிகளின் கோரிக்கை தற்போது அதிமுக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 14ம் தேதி அதிமுக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கை எழுந்த பின் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இருவரும் தனித்தனியே தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவருகின்றனர். நேற்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ். ஒற்றைத் தலைமை தேவையற்றது என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று காலை பொன்னையன், ஆர்.பி. உதயகுமார், வைகை செல்வன், செம்மலை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து ஆலோசனை நடத்தினர்.

ADVERTISEMENT



Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT