ADVERTISEMENT
சட்டமன்றத்திற்கு இன்று வந்திருந்த அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த எம்எல்ஏக்கள், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து சட்டமன்றத்திற்கு வெளியே வந்தவர்கள் இரு விரல்களை உயர்த்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சென்னை பசுமை வழி சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லம் அருகே தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும் கேக் வெட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றுக்கொண்டார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments