ADVERTISEMENT

தலைவலியான சந்திரபாபு நாயுடு... மேல்சபையை கலைக்கும் ஜெகன்..?

09:42 PM Jan 24, 2020 | suthakar@nakkh…

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. கடந்த ஒரு வருடமாக பல்வேறு அதிரடி திட்டங்களை அம்மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமுல்படுத்தி வருகிறார். தற்போது ஆந்திராவுக்கு மூன்று தலைநகரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த முயற்சிக்கு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்.


ADVERTISEMENT


தற்போது கடும் எதிர்ப்புக்கு இடையே கீழ் சபையில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும், மேல் சபையில் ஜெகனுக்கு மோதுமான அளவு மெஜாரிட்டி இல்லை. இதனால் மேல் சபையை கலைக்கும் மன நிலைக்கு ஜெகன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு கலைக்கும் பட்சத்தில் ஜெகன் தலைமையிலான அரசு எளிமையாக அனைத்து மசோதாக்களையும் சட்டப்பேரவையில் நிறைவேற்றம். தமிழகத்தின் வழியில் ஆந்திராவில் மேல் சபை கலைப்பு நடைபெறுமா என்பது இன்னும் சில மாதங்களில் தெரியவரும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT