ADVERTISEMENT

தீண்டாமையை கடை பிடித்தாரா யோகி ஆதித்யநாத்???

12:32 PM Dec 15, 2018 | kamalkumar

ADVERTISEMENT

நேற்று உத்திரப்பிரதேசம், லக்னோவில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதுகுறித்த புகைப்படம் நேற்று வெளியானது. சமூக ஊடங்களில் இது மிகவும் பரவலாக பேசப்பட்டது. பலரும் இதற்கு கமெண்ட் செய்திருந்தனர். சிலர் இது நவீன தீண்டாமை அப்படித்தான் இருக்கும் என்றும், சிலர் பத்திரிகையாளர்கள் அந்த திரை மறைவிற்கு பின்னால் இருக்கிறார்கள் என்றும், இன்னும் சிலர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவர்களின் சாதிதான் அவர்களுக்கான இடத்தை முடிவுசெய்யும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஏன் இதுபோல் நடந்தது என்பதற்கான அதிகாரப்பூர்வ விளக்கம் ஏதும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT