ADVERTISEMENT

தொடரும் சோகம்... கரோனா உயிரிழப்பு 15 ஆயிரத்தை கடந்தது!

05:53 PM Mar 23, 2020 | suthakar@nakkh…

சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.


ADVERTISEMENT


ஆனாலும் கரோனா தாக்குதலுக்கு உயிரிழப்புக்கள் தொடர்கின்றது. . இதுவரை 170 நாடுகளுக்கு மேல் இந்த வைரஸ் பரவியுள்ளது. இன்றைக்கு காலையில் 14 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி இருந்த நிலையில், தற்போது உயிரிழப்பு உலகம் முழுவதும் 15 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் அவசரநிலையை அமல்படுத்தியுள்ளன. இத்தாலி உள்ளிட்ட சில நாடுகள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT