சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.
டான்ஸ் வீடியோ
இருந்த போதிலும் இதுவரை இந்தியாவிலும் 147 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை இந்திய அரசாங்கம் தற்போது உறுதி செய்துள்ளது. இந்நிலையில், கேரளாவில் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காவலர்கள் குழுவாக நடனமாடிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் கை கழுவும் முறையை நடனத்தோடு காவலர்கள் விளக்கியுள்ளார்கள். விழிப்புணர்வுக்காக இந்த வீடியோ தயாரிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் கரோனா பாதிப்பு குறைந்தால் அது மகிழ்ச்சியான ஒன்றுதான் என்றும் அந்த வீடியோவில் நடனமாடிய காவலர்கள் தெரிவித்துள்ளார்கள்.
டான்ஸ் வீடியோ
இருந்த போதிலும் இதுவரை இந்தியாவிலும் 147 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை இந்திய அரசாங்கம் தற்போது உறுதி செய்துள்ளது. இந்நிலையில், கேரளாவில் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காவலர்கள் குழுவாக நடனமாடிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் கை கழுவும் முறையை நடனத்தோடு காவலர்கள் விளக்கியுள்ளார்கள். விழிப்புணர்வுக்காக இந்த வீடியோ தயாரிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் கரோனா பாதிப்பு குறைந்தால் அது மகிழ்ச்சியான ஒன்றுதான் என்றும் அந்த வீடியோவில் நடனமாடிய காவலர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments