ADVERTISEMENT
ADVERTISEMENT
ஆசிரியர் தேர்வு சான்றிதழ் (டெட்) வாழ்நாள் முழுவதும் செல்லும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஆசிரியர் தேர்வு சான்றிதழ் (Teacher Eligibility Test- TET) ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்பதை வாழ்நாள் முழுவதும் என்று மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 2011ஆம் ஆண்டுமுதல் ஆசிரியர் தேர்வு சான்றிதழ் பெற்றவர்களுக்குப் பொருந்தும். காலாவதியானச் சான்றிதழை மறுமதிப்பீடு செய்ய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது." இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Show comments