ADVERTISEMENT

காரின் மேல் பகுதியில் அமர்ந்து மது அருந்திய இருவர் கைது

05:08 PM Jul 31, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

காரின் மேற்பகுதியில் அமர்ந்துகொண்டு மது அருந்தியபடி பயணித்த இரண்டு இளைஞர்களைப் போலீசார் கைது செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

அண்மையாகவே சமூக வலைத்தளங்களில், பொது இடங்களிலேயே மது அருந்துவது, பொதுமக்களுக்கு இடையூறு செய்வது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில், நடுச்சாலையில் ஓடும் காரின் மேல் பகுதியில் அமர்ந்து கொண்டு இரண்டு இளைஞர்கள் மது அருந்தியபடியே சென்று கொண்டிருந்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் குவிந்த நிலையில், உத்தரப்பிரதேச போலீசார் 2 இளைஞர்களையும் கைது செய்ததோடு அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். தற்போது இளைஞர்கள் இருவர் காரின் மேல் பகுதியில் அமர்ந்து கொண்டு மது அருந்தும் இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT