வாகன சோதனையின் போது நிற்காமல் சென்ற காரின் மீது போக்குவரத்து காவலர்கள் ஏறிய சம்பவம் தில்லியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தில்லியில் போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது ஒரு வாகனத்தை போக்குவரத்து காவலர் ஒருவர் நிறுத்தியுள்ளார். ஆனால் அந்த காவலர் அவரிடம் நிற்பது போல பாவலா செய்து வேகமாக காரை எடுக்க முயன்றுள்ளார். இதனால் அந்த காவலர் வாகனத்தை மறித்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ஆனால் காவலரின் உத்தரவை மதிக்காமல் அந்த வண்டியை ஓட்டியவர் தொடர்ந்து வண்டியை எடுக்க முயன்றுள்ளார். போக்குவரத்து காவலரும் வாகனத்தில் இருந்து இறங்காததால் அவரை வாகனத்தில் வைத்துக்கொண்டே கார் ஓட்டுநர் வாகனத்தை ஓட்டியுள்ளார். இதனை வாகனத்தில் இருந்த மற்றொருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.
Show comments