வாகனங்களில் 'FASTAG' ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஜனவரி 15- ஆம் தேதி வரை அவகாசம் நீட்டித்து மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 'FASTAG' பெறுவதில் தாமதம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 'FASTAG' இல்லாத வாகனங்கள் சுங்கச்சாவடியில் ஒரு பாதையில் பணமாக கட்டணத்தை செலுத்தி செல்லலாம் என கூறியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண 'FASTAG' கட்டண முறை கொண்டு வரப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியை கடக்கும் வாகனங்களின் கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் தானாக ஸ்கேன் ஆகும். ஸ்கேன் செய்யப்படும் வாகனத்திற்கான சுங்கக் கட்டணம் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை மூலம் மத்திய அரசுக்கு வருவாய் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ADVERTISEMENT
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண 'FASTAG' கட்டண முறை கொண்டு வரப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியை கடக்கும் வாகனங்களின் கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் தானாக ஸ்கேன் ஆகும். ஸ்கேன் செய்யப்படும் வாகனத்திற்கான சுங்கக் கட்டணம் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை மூலம் மத்திய அரசுக்கு வருவாய் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments