ADVERTISEMENT

அதிகாரிகளுக்கு லஞ்சம் தர குடும்பத்துடன் பிச்சை எடுத்த முதியவர்...

04:52 PM Jan 28, 2019 | kirubahar

ADVERTISEMENT

ADVERTISEMENT

முதியவர் ஒருவரின் நிலத்திற்கு பட்டா வழங்குவதற்கு அதிகாரி ஒருவர் ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதால் அவர் அந்த பணத்தை தர சாலைகளில் பிச்சை எடுத்த சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பூபால்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் தனக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்திற்கு பட்டா வாங்க சார்பதிவு அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு பட்டா மாத்துவதற்கு 1 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர் அங்குள்ள அதிகாரிகள். இதனையடுத்து அந்த முதியவர் தனது 70 வயது மனைவியுடன் அலுவலகத்திற்கு எதிரே உள்ள சாலையில் 'அதிகாரிகளுக்கு லஞ்சம் தர பணம் பிச்சை எடுக்கிறேன், அதற்கு உங்களால் முடிந்த பணத்தை கொடுங்கள்' என்று எழுதப்பட்ட அட்டையுடன் அமர்ந்து பிச்சையெடுத்துள்ளார். இந்த விஷயம் சமூகவலைதளங்களில் பரவ ஆரம்பிக்க, அவரை சமாதானப்படுத்திய அதிகாரிகள் அவரின் நிலத்திற்கு பட்டா வழங்கியுள்ளனர். இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் பெரிதாக அந்த அதிகாரிகளுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT