ADVERTISEMENT

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக சோதனை!

06:53 PM Mar 27, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

விண்ணில் பறந்துச் சென்றுக் கொண்டிருக்கும் எதிரி இலக்குகளை தரையில் இருந்தவாறே பாய்ந்து இடைமறித்து தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதித்தது.

ஒடிஷா மாநிலம், பாலசோர் அருகே நிறுத்தப்பட்டிருந்த சிறு கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அளித்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணைகள் நடுத்தர தொலைவிற்கு பறந்து சென்று தாக்கக் கூடியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சாதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையினருக்கு கடற்படை தளபதி வி.ஆர்.சௌத்ரி பாராட்டுத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் புதன்கிழமை பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT