சமீபத்தில் மஹாராஷ்டிராவில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்நிலையில், சரியான காலத்தில் மழை பொய்காததால் விவசாயிகள் விவசாயத்தில் விளைச்சலின்றி நஷ்டத்தில் இருக்கும் பிரச்சனையை இன்று மஹாராஷ்டிரா சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் எழுப்பினார். அதனை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ-க்கள் சிவசேனா அரசுக்கு எதிராக முழக்கமிட்டு, அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் இவ்விரு கட்சி எம்.எல்.ஏக்களுக்கு இடையே காரசாரமான விவாதங்கள் ஏற்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.
Show comments