ADVERTISEMENT
பீஹார், சஹர்சா மாவட்டத்தில் நடு ரோட்டில் பள்ளி சிறுமியிடம் ஒரு கும்பல் தவறாக நடந்துகொண்டு, அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரவவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ADVERTISEMENT
அந்த வீடியோவில், சைக்கிளை எடுக்கச்சென்ற சிறுமியை ஒரு கும்பல் சாலையின் ஓரம் தடுத்து நிறுத்துகிறது. ஆண் நண்பர் அவரைக் காப்பாற்ற முயற்சிக்கும்போது, மற்றவர்கள் அந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்கிறார்கள். கும்பலில் சிலர் அந்த சிறுமியின் துப்பட்டாவை பறிக்கிறார்கள் .
இந்த வீடியோவின் அடிப்படையில் ஒரு பள்ளி மாணவனை கைது செய்யப்பட்டுள்ளான். மேலும், வீடியோ எடுத்தவரையும் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் யார் என்று தெரியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
ADVERTISEMENT
Show comments