ADVERTISEMENT
ADVERTISEMENT
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கலைஞர் செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். திமுக தலைவர் கலைஞரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் இன்று காலை வைக்கப்பட்டது. கலைஞரின் உடலுக்கு திமுக தொண்டர்களும், பொதுமக்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலைஞரின் உடலுக்கு திமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் வரிசையில் காந்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .
இந்நிலையில் தற்போது இன்னும் சிறிது நேரத்தில் கலைஞரின் இறுதி ஊர்வலம் தொடங்க இருக்கிறது. இறுதியாக சில முக்கிய நபர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கலைஞர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
Show comments