ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்தியாவில் ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டியான ரெப்போ வட்டி 0.5 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 4.9 விழுக்காட்டில் இருந்து 5.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இந்த வட்டி விகித உயர்வு அதிகரிப்பால் வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான வட்டியும் அதிகரிக்க உள்ளது.
நாட்டில் பண வீக்கம் அதிகரித்து வருவதால் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
Show comments