ADVERTISEMENT

"பாரத ரத்னா பிரச்சாரத்தை நிறுத்துங்கள்" - அபிமானிகளுக்கு ரத்தன் டாடா வேண்டுகோள்!

03:46 PM Feb 06, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர் ரத்தன் டாடா. இவர் தனது சமூக பணிகளுக்காகவும் கொண்டாடப்பட்டு வருகிறார்.

இந்தநிலையில் தற்போது ரத்தன் டாடாவிற்கு, இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்தக் கோரிக்கையை அவரது அபிமானிகள் ட்விட்டர் வலைதளத்தில் எழுப்பி வருவதோடு, இதுதொடர்பாக ஹாஷ்டேக் ஒன்றையும் பெரிய அளவில் ட்ரெண்ட் செய்தனர்.

இதையடுத்து ரத்தன் டாடா, தனக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை நிறுத்துமாறு, தனது அபிமானிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சமூக ஊடகங்களில் ஒரு பகுதியினர், விருது தொடர்பாக வெளிப்படுத்திய உணர்வுகளை மதிக்கிற அதேவேளையில், இதுபோன்ற பிரச்சாரங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார். மேலும் அவர், “இந்தியனாக இருப்பதற்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் செழிப்பிற்கும் பங்களிக்க முயற்சி செய்வதற்கும், நான் என்னை அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன்" எனவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT