கரோனாவை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகின்றன.
ADVERTISEMENT
இந்த நிலையில் ஆந்திரா, குஜராத், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 18 ராஜ்ய சபா உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 26- ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், கரோனா காரணமாக இந்த மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் ராஜ்ய சபா தேர்தலுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments