”ராகுல்தான் மோடிபோபியாவை வளர்த்தார். அவருடைய அனைத்து பேச்சுக்களிலும் மோடி, மோடி என்று மோடியை பற்றியே பேசிகொண்டு இருக்கிறார். ராகுலை பொருத்தவரை மோடியை நீக்க வேண்டும் ஆனால் எங்களுக்கு இந்த நாட்டிலுள்ள வறுமை, வேலையின்மை, படிப்பின்மை போன்றவற்றை நீக்க வேண்டும்” என்று பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா மத்திய பிரதேசத்திலுள்ள நர்ஷிங்பூர் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியுள்ளார்.
ADVERTISEMENT
இதனையடுத்து நாளை போபாலில் அமித்ஷா தலைமையில் நடக்க இருந்த பிரமாண்ட பேரணியானது பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய உளவுத்துறையில் வந்த அறிக்கையில் அமித்ஷாவுக்கு பாதுகாப்பு குறைவாக இருப்பதால் நாளை நடக்க உள்ள பேரணியில் கலந்துகொள்ள வேண்டாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments