ADVERTISEMENT

வெளிநாட்டு ரத்தம் ஓடும் ராகுல்காந்தி எப்போதும் தலைவராக முடியாது!! - ஜெய்பிரகாஷ் சிங்

01:01 PM Jul 17, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராகுல் காந்தியின் உடம்பில் வெளிநாட்டு ரத்தம் ஓடுகிறது எனேவ அவரால் எப்போதும் இந்தியாவின் தலைவராக முடியாது என பகுஜன் சமாஜ் கட்சியின் துணை தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் நடந்த விழா ஒன்றில் கட்சி தொண்டர்கள் முன்னிலையில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் துணை தலைவர் ஜெய்பிரகாஷ் சிங்

ராகுல் காந்தியின் உடலில் வெளிநாட்டு ரத்தம் ஓடுகிறது ,அவர் பார்க்க அவரது தந்தை ராஜீவ் காந்தி போல இருக்கலாம் ஆனால் அவரது செயல்பாடுகள் அனைத்தும் வெளிநாட்டவரான அவரது அன்னை சோனியா காந்தியின் சுவடுகளை பின்பற்றும் ஒன்றாகவே இருக்கிறது என ஆவேசமாக பேசினார். அதுமட்டுமின்றி அடுத்த மன்னர் அரசியின் மகனாக இருக்க முடியாது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவராகதான் இருக்கமுடியும் எனவே ராகுல் காந்தி இந்தியாவின் தலைவராகவோ, பிரதமராகவோ ஆக முடியாது என கூறினார்.

பாஜக ஆட்சியை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து அடுத்த தேர்தலுக்கு ஒரு பலமான அணியை உருவாக்க முயற்சித்து வரும் சூழலில் பகுஜன் சமாஜ் கட்சி துணைத்தலைவரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT