ADVERTISEMENT
ADVERTISEMENT
மத்தியப்பிரதேசத்தில் ஹர்தா என்ற இடத்தில் ரயில்வே ஊழியர்கள் மின்சார வயர்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வந்த ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நின்றது. ரயில் நின்றதற்கான காரணம் தெரியாமல் தவித்த ஊழியர்கள், அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் ரயிலை தள்ளியுள்ளனர்.
ஒரு தண்டவாளத்தில் இருந்து அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்திற்கு இதன் மூலம் ரயிலை நகர்த்தியுள்ளனர். இந்நிலையில், ரயிலை கைகளால் தள்ள வைத்த ரயில்வே அதிகாரிகளின் செயல் அங்கிருந்த பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Show comments