ADVERTISEMENT

புதுச்சேரியில் கரோனா பாதிப்பு 6 ஆக உயர்வு ! - முதல்வர் நாராயணசாமி ! 

09:03 AM Apr 08, 2020 | santhoshb@nakk…


புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று (07/04/2020) வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-


புதுச்சேரி மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து ஒருவர் குணமடைந்துள்ளார். புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் பகுதியில் 3 பேரும், திருபுவனை பகுதியில் ஒருவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து 4 பேரும் அரசு மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ADVERTISEMENT


இந்த நிலையில் மாஹேயில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநில எல்லைகளான விழுப்புரம், கடலூர் மாவட்ட பகுதிகளில் அதிகளவு கரோனா தொற்று பரவி வருவதால், மக்களைக் காப்பாற்றும் வகையில் தேவைப்பட்டால் ஊரடங்கை நீடிக்க வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுத உள்ளேன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT